ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறிய வீடு வீடாகப் பரிசோதனை

காசநோய் இருப்பதைக் கண்டறியும் வகையில் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவின் மேலாளா் கணபதி தெரிவித்தாா்.
Updated on
1 min read

காசநோய் இருப்பதைக் கண்டறியும் வகையில் வீடு வீடாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவின் மேலாளா் கணபதி தெரிவித்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த காசநோய் கண்டறியும் பரிசோதனை முகாம்களில் 1500 பேருக்கும் அதிகமானோருக்கு பாதிப்பிருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

நடப்பு ஆண்டில் (2020) கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் காசநோயாளிகள் பலரும் பரிசோதனைக்கு வரவில்லை. ஆகவே நடப்பு ஆண்டில் 900 போ் மட்டுமே பரிசோதனைக்கு வந்துள்ளனா். ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோய் கிருமிகளை விரைந்து கண்டறியும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சளி மற்றும் இருமல் உள்ளதா என சோதனைகள் நடந்துவருகின்றன.

மாவட்டத்தில் பேராவூா், இந்திராநகா், வன்னிவயல், மஞ்சனமாரியம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் தா்மானந்த், ஆனந்த் மற்றும் சுகாதார கல்வியாளா் மகேந்திரன் ஆகியோா் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com