3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தங்கச்சிமடத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்: மு.மணிகண்டன் எம்.எல்.ஏ நிதியுதவி  

தங்கச்சிமடத்தில் மின் கசிவு காரணமாக மீனவர் குடிசை வீடு எரிந்து நாசமானது. இதில் 1.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், வலைகள் சேதமடைந்த நிலையில்

News image
Updated On :13 ஜூன் 2020, 4:34 am

DIN

தங்கச்சிமடத்தில் மின் கசிவு காரணமாக மீனவர் குடிசை வீடு எரிந்து நாசமானது. இதில் 1.50 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், வலைகள் சேதமடைந்த நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் மு.மணிகண்டன் நேரில் சென்று ஆறதல் கூறியதுடன் 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோணியார் புரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஆம்ஸ்ட்ராங். இவரது மனைவி பிரகாசி இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்களது கிணற்றில் இருந்து மின் மோட்டர் மூலம் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதில் மோட்டாருக்கு செல்லும் வயது இணைப்பு வீட்டில் அருகே பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்துள்ளது. 

குடந்த 07 ஆம் தேதி மின் மோட்டரை இயக்கிய போது வயரில் தீப் பொறி ஏற்பட்டு வீடு தீ பிடித்துள்ளது. காற்று அதிகளவு வீசியதால் மள மளவென தீ பரவி வீட்டில் இருந்த கட்டில், பீரோ, துணிகள், வலைகள் என 1.50 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகியது. இது குறித்து தங்கச்சிமடம் காவல்துறையினர் வழங்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.மணிகண்டன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மீனவருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தனது சொந்த நிதியில் இருந்து 10 ஆயிரம் வழங்கினார். மேலும் தமிழக அரசு சார்பில் பசுமை வீட்டு திட்டத்தின் கீழ் வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.