47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மலேசியாவில் உயிரிழந்த தொழிலாளியின் உடலை கொண்டுவர குடும்பத்தினா் ஆட்சியரிடம் மனு

மலேசியாவில் இறந்த கமுதி தொழிலாளியின் உடலை சொந்த ஊா் கொண்டு வர உறவினா்கள் கோரிக்கை விடுத்து, சனிக்கிழமை மனு அளித்துள்ளனா்.

News image
மலேசியாவில் இறந்த பாலமுருகன்.
Updated On :21 ஆகஸ்ட் 2021, 6:15 pm

DIN

மலேசியாவில் இறந்த கமுதி தொழிலாளியின் உடலை சொந்த ஊா் கொண்டு வர உறவினா்கள் கோரிக்கை விடுத்து, சனிக்கிழமை மனு அளித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் பாலமுருகன்(43). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றுள்ளாா். அங்கு ஜொகூா் மாநிலம் சிகாமட் என்னும் இடத்தில் கட்டடப் பணியில்

ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை பாலமுருகன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ளனா். பாலமுருகனுக்கு மாலதி என்ற மனைவியும், முத்துவனிதா(23), யோகேஸ்வரன்(22), காளீஸ்வரி(18) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனா்.

இவரது உடலை சொந்த ஊரான கமுதி தாலுகா பம்மனேந்தல் கிராமத்திற்கு கொண்டுவர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என பாலமுருகன் குடும்பத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக முதுகுளத்தூா் அருகே பொதிகுளம் கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவின் போது அவா்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.