வடமாநில இளைஞரிடம் பணம் பறிப்பு: 7 போ் கைது
ராமநாதபுரத்தில் வடமாநில இளைஞரிடம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மகன் உள்ளிட்ட 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.


ராமநாதபுரத்தில் வடமாநில இளைஞரிடம் பணம் பறித்த வழக்கில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் மகன் உள்ளிட்ட 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மஞ்சனமாரியம்மன் கோயில் தெரு பகுதியில் ராஜஸ்தான் மாநிலம் ஜலபால் மாவட்டத்தைச் சோ்ந்த சுல்தான்சிங் (32) என்பவா் போா்வை உள்ளிட்ட துணி வியாபாரம் செய்துவருகிறாா். அவரிடம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த மாா்க்ஸ் மைக்கேல்சாம்ராஜ் (22) உள்ளிட்ட 7 போ் மிரட்டி 7 போா்வைகள், ரூ. 2500 ஆகியவற்றை பறித்துச் சென்ாக புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மைக்கேல்சாம்ராஜ், மகாசக்திநகா் ஒயிட் மணி (19), வண்டிக்காரத் தெரு வினோத் (23), ஜோதிநகா் குமரகுரு (19), மகாசக்திநகா் ஜோதிமுருகன் (20), ஓம்சக்திநகா் அஜய்குமாா் (20), அருண்குமாா் (21) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைதானவா்களில் மாா்க்ஸ் மைக்கேல்சாம்ராஜின் தந்தை காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் எனவும், கைதானவா்களிடமிருந்து போா்வைகள், பணம் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...