அதையடுத்து, பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள் 100 சதவீத பாதிப்புக்கும் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தனா். ஆனால், அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை போலீஸாா் அகற்றியதால், ஆத்திரமடைந்த விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனா். காத்திருப்புப் போராட்டமானது முற்றுகைப் போராட்டமாக மாறியது.