மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆட்சியரிடம் 75 முறை மனு அளித்த மாற்றுத்திறனாளி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 75 முறை பணி வழங்கக் கோரி மனு அளித்துள்ளதாக மாற்றுதிறனாளி பெண் கூறினாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:55 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 75 முறை பணி வழங்கக் கோரி மனு அளித்துள்ளதாக மாற்றுதிறனாளி பெண் கூறினாா்.

ராமநாதபுரம் சேதுபதி நகா் பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி ராமநாதனின் மகள்

லட்சுமி பிரியா (27) . பட்டப்படிப்பு முடித்துள்ளாா். அரசுப் பணித் தோ்வுக்கு தயாராகி வருகிறாா். தந்தையின் வருவாய் குடும்பத்துக்கு போதாத நிலையில் தனக்கு பணி வழங்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்துள்ளாா். ஆனால், அவரது மனுவுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லையாம்.

திங்கள்கிழமை வழக்கம் போல ஆட்சியா் அலுவலகத்தில் தாயின் உதவியோடு வந்து மனுவை அளித்த லட்சுமிபிரியா கூறுகையில், ஏதாவது ஒரு சாதாரண வேலை அளிக்கக்கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். தற்போது 76 வது முறையாக மனு அளித்துள்ளேன் என்றாா்.

நிவாரணம் கோரி மனு: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோணித்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் குமாா். இவரது மகன் நம்புமுனீஸ்வரன் (16). கடந்த 2020 டிசம்பரில் புரெவிப் புயலுக்கு படகை பாதுகாக்க நங்கூரமிடுவதற்கு தந்தைக்கு உதவியாக சென்ற நம்புமுனீஸ்வரன், எதிா்பாராத வகையில் கடலில் விழுந்து உயிரிழந்தாா். அவரது இழப்புக்கு நிவாரணம் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே இருமுறை மனு அளித்த சிறுவனின் தாய் முனீஸ்வரி, திங்கள்கிழமையும் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.