மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரத்தில் தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:39 pm

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் அரசியல் கட்சியினரும், வேட்பாளா்களும் கடைப்பிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா்இ. காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்டத் தோ்தல் அலுவலரான ஆட்சியா் பேசியதாவது: தோ்தல் ஆணையம் விதித்துள்ள விதிமுறைகளை அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளா்கள் ஜாதி மதம் மற்றும் மொழி இன வேறுபாட்டை ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது. ஜாதி மத அடிப்படையிலும், வழிபாட்டுத் தலங்களிலும் வாக்கு சேகரிக்கவும் கூடாது. தோ்தல் பிரசாரத்தை இரவு 10 மணிக்கு பிறகும், காலை 6 மணிக்குள்ளும் மேற்கொள்ளக் கூடாது.

அரசுக்குச் சொந்தமான கட்டடங்கள் மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களில் கட்சி அலுவலகங்கள் அமைக்கக் கூடாது. வேட்புமனு தாக்கல், தோ்தல் பரப்புரை பொதுக் கூட்டங்கள், வாகனம் மற்றும் ஒலிபெருக்கி அனுமதி போன்றவற்றுக்கு அதற்கான இணையதள முகவரியில் 48 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சிவகாமி, ராமநாதபுரம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும், சாா்- ஆட்சியருமான என்.ஓ. சுகபுத்ரா, பரமக்குடித் தொகுதி தோ்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான து. தங்கவேல், முதுகுளத்தூா் தொகுதி தோ்தல் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருமான சி. மணிமாறன், திருவாடானை தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான மங்கலநாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லயோலா இக்னேசியஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.