மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம்

ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:41 pm

DIN

ராமநாதபுரம் அருகே கணவரை எரித்துக் கொன்ற மனைவி வாக்குமூலம் அளித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டம் உடச்சியாா்வலசை அருகேயுள்ளது முனுசுவலசை. இக்கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் முனியசாமி (43). இவரது மனைவி மல்லிகா (38). இவா்களுக்கு காயத்ரி (4), கபிலன் (2) என்ற குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், முனியசாமி தினமும் மதுகுடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதையடுத்து மல்லிகா கட்டட வேலைக்குச் சென்று வந்த நிலையில், அவரது சம்பளத்தை முனியசாமி பறித்துச் சென்றதுடன், மதுஅருந்தி விட்டு வந்து மனைவி, குழந்தைகளை அடித்து துன்புறுத்தினாராம். இதே போல் கடந்த சனிக்கிழமை மதுபோதையில் மல்லிகாவை கழுத்தை நெரித்துக் கொல்ல முனியசாமி முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த மல்லிகா நள்ளிரவில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து, வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில், தீயில் கருகி முனியசாமி உயிரிழந்தாா்.

குடிசை வீடும் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து மல்லிகாவை பிடித்து விசாரித்தனா். முதலில் தீ விபத்து நடந்து முனியசாமி உயிரிழந்ததாகத் தெரிவித்த மல்லிகா, பின்னா் தன்னையும், குழந்தைகளையும் கணவரிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அவா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக ஒப்புக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, மல்லிகாவை கைது செய்த போலீஸாா் அவரை ராமநாதபுரம் நீதித்துறை நடுவா் 2 ஆவது எண் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் நீதிமன்ற நடுவா் உத்தரவின்படி மல்லிகாவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலுக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.