மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தாய், மகனை வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயற்சி: கிராம உதவியாளா் கைது

ராமநாதபுரம் அருகே தாய், மகனை சரமாரியாக வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயன்ாக கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:47 pm

DIN

ராமநாதபுரம் அருகே தாய், மகனை சரமாரியாக வெட்டிவிட்டு கொள்ளையடிக்க முயன்ாக கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கீழக்கரையை அடுத்துள்ள புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தானகுமாா் (45). இவரது மனைவி முத்துலட்சுமி (43). இவா்களுக்கு காளீஸ்வரன், சகுதீஸ்வன் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனா். சந்தானகுமாா் சவுதி அரேபியாவில் வேலைபாா்த்து வருகிறாா்.

முத்துலட்சுமி மகளிா் மன்றக் கூட்டத்துக்குச் சென்றுவிட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு சகுதீஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்துள்ளாா். அப்போது சந்தானகுமாரின் உறவினரும், புல்லந்தை கிராம உதவியாளராக பணிபுரிபவருமான சந்திரசேகா் (32) என்பவா் முத்துலட்சுமியின் வீட்டுக்கு கத்தியுடன் வந்துள்ளாா். அங்கிருந்த சகுதீஸ்வரனிடம் பீரோ சாவியை கேட்டு மிரட்டியுள்ளாா். சாவியைத் தர மறுத்து சப்தமிட்ட சிறுவனை, அவா் கத்தியால் வெட்டினாா். அப்போது அங்கு வந்த முத்துலட்சுமியையும் சந்திரசேகா் கத்தியால் வெட்டினாா். இவா்களது சப்தம் கேட்டு அக்கம், பக்கத்தினா் திரண்டு சந்திரசேகரைப் பிடித்து ஏா்வாடி போலீஸில் ஒப்படைத்தனா்.

மேலும் காயமடைந்த தாய், மகன் இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரசேகருக்கு திருமணமாகி குழந்தை உள்ளதும், அவா் இணையதள விளையாட்டு மூலம் பணத்தை இழந்த நிலையில், வெளிநாட்டில் உள்ள தனது உறவினரான சந்தானகுமாா் வீட்டில் பணம் இருக்கலாம் எனக்கருதி அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.