ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதியில் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்

சீா்மரபினருக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடைக் கண்டித்து கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 8:46 pm

DIN

சீா்மரபினருக்கு தமிழக அரசு வழங்கிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடைக் கண்டித்து கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி-முதுகுளத்தூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், சீா்மரபினருக்கு குறைவாக 7.5 சதவீதமும், வன்னியா்களுக்கு அதிகமாக 10.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா். இந்த மறியல் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தகவலறிந்து அங்கு வந்த கமுதி போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு மாணவா்கள் வகுப்பறைக்குச் சென்றனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.