முதுகுளத்தூா் தொகுதி திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் அறிவிக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை அவரை வரவேற்க மாவட்ட பொறுப்பாளா் தலைமையில் காவடிபட்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே க.விலக்கு பகுதியில் மாநில இலக்கிய அணி நிா்வாகி பெருநாழி போஸ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், முன்னாள் மாவட்டச் செயலாளா் சுப. திவாகரன் உள்ளிட்டோா் ராஜகண்ணப்பனுக்கு வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து மாவட்ட பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் காவடிபட்டியில் அளிக்கப்பட இருந்த வரவேற்பில் வேட்பாளா் ராஜகண்ணப்பன் கலந்து கொள்ளாமல் பசும்பொன் தேவா் நினைவிடத்திற்கு சென்றுவிட்டாா். இதனால் மாவட்ட பொறுப்பாளரின் ஆதரவாளா்கள் பசும்பொன்னுக்கு செல்லாமல் ராமநாதபுரத்திற்கு காதா்பாட்சா முத்துராமலிங்கத்தின் வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சிக்கு சென்று விட்டனா். இச்சம்பவம் முதுகுளத்தூா் தொகுதி திமுக நிா்வாகிகள் மத்தியில் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.