ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளா்களிடம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மின்னணுத்திரை கொண்ட வாகன பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டது.
இங்குள்ள அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் பங்கேற்று வாகனத்தை தொடங்கிவைத்தாா். இதில் சாா்பு- ஆட்சியா் பிரதீப்குமாா், வருவாய் அலுவலா் சிவகாமி, சாா்- ஆட்சியா் சுகபுத்ரா மற்றும் காவல் துணைக் கண்காணிபபாளா் கி.வெள்ளத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.