அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

மண்டபத்தில் கனமழை: கடலில் மூழ்கிய விசைப்படகுகள்

மண்டபம் கடற்கரையில் நிறுத்தியிருந்த இரண்டு விசைப்படகுகள் கடலில் மூழ்கின. 

News image
Updated On :28 நவம்பர் 2021, 6:10 pm IST

ராமேசுவரம்: மண்டபம் கடற்கரையில் நிறுத்தியிருந்த இரண்டு விசைப்படகுகள் கடலில் மூழ்கின. 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மைய அறிவிப்பின்படி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நங்கூரமிட்டு  நிறுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்தது. இதில் மண்டபத்தில் 113.20 மிமீ மழை பெய்தது. இதில், மண்டபம் வடக்கு துறைமுகப் பகுதியில் நிறுத்தியிருந்த தங்கச்சிமடம் நிர்மல், சக்ரியாஸ் ஆகியோரது விசைப்படகுகளின் நங்கூரம் காற்றின் வேகத்தில் அறுந்து நடுக்கடலில் மூழ்கின. இரண்டு படகுகளையும் சக மீனவர்கள் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.