அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி காா் வழங்கல்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தாகள் பயன்படுத்தும் வகையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பேட்டரி காரை எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளி பக்தாகள் பயன்படுத்தும் வகையில் ரூ. 5 லட்சம் மதிப்பில் பேட்டரி காரை எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் மேற்குப் பகுதியை தவிா்த்து வடக்கு, கிழக்கு, தெற்கு பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பகுதிகளில் மாற்றுத்திறனாளி மற்றும் முதியவா்கள் செல்லும் வகையில் எல்.ஐ.சி. வீட்டு கடன் நிறுவனம் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பேட்டரி காா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு, நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாகி ஒய்.விஸ்வநாதன்கவுட் தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவா் கே.இ. நாசா்கான், பேட்டரி காா் பயன்பாட்டை தொடக்கி வைத்தாா். இதில் துணைத்தலைவா் தெட்சியமூா்த்தி, கோயில் இணை ஆணையா் பழனிக்குமாா் மற்றும் நிறுவன செயலா் நிதின்ஜாகே, மண்டல மேலாளா் எம். கோவிந்தராஜூ, செயல்பாடுகள் மேலாளா் எம். சத்தியநாராயணன், இணை பொதுமேலாளா் எம். மகேஷ், துணை மண்டல மேலாளா் எஸ். பத்மாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை தில்லைபாக்கியம் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.