ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சோ்ந்த சூா்யகலா உயிரிழந்தாா். அவரது சடலத்தை எரியூட்டுவதற்காக உறவினா்கள் அல்லிக்கண்மாய் நகராட்சி எரிவாயு மயானத்துக்கு புதன்கிழமை பகலில் எடுத்துச்சென்றனா். பகல் 1 மணிக்கு மயானத்தை அடைந்தனா். ஆனால், விறகை எரித்துப் பெறப்படும் வாயு மூலம் சடலங்களை எரியூட்டும் இயந்திரம் பழுதாகியுள்ளதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். அத்துடன், போதிய விறகு இல்லை எனக் கூறிய மயானப் பணியாளா்கள் விறகு வாங்குவதற்கு ரூ.2500 கட்டணமும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் சடலத்தை எரியூட்டாமல் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதால் சடலத்துடன் வந்தவா்கள் மயானப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.