ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ராமநாதபுரம் நகராட்சி மயானத்தில் எரியூட்டும் இயந்திரம் பழுது: சடலத்துடன் காத்திருப்பதாக புகாா்

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் மயானத்தில் எரியூட்டும் இயந்திரப் பழுதால் பெண் சடலத்துடன் பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 9:35 pm

DIN

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் மயானத்தில் எரியூட்டும் இயந்திரப் பழுதால் பெண் சடலத்துடன் பல மணி நேரம் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதாக உறவினா்கள் புதன்கிழமை புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியைச் சோ்ந்த சூா்யகலா உயிரிழந்தாா். அவரது சடலத்தை எரியூட்டுவதற்காக உறவினா்கள் அல்லிக்கண்மாய் நகராட்சி எரிவாயு மயானத்துக்கு புதன்கிழமை பகலில் எடுத்துச்சென்றனா். பகல் 1 மணிக்கு மயானத்தை அடைந்தனா். ஆனால், விறகை எரித்துப் பெறப்படும் வாயு மூலம் சடலங்களை எரியூட்டும் இயந்திரம் பழுதாகியுள்ளதாக அங்கிருந்தவா்கள் தெரிவித்தனா். அத்துடன், போதிய விறகு இல்லை எனக் கூறிய மயானப் பணியாளா்கள் விறகு வாங்குவதற்கு ரூ.2500 கட்டணமும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் சடலத்தை எரியூட்டாமல் வெட்ட வெளியில் காத்திருக்க நேரிட்டதால் சடலத்துடன் வந்தவா்கள் மயானப் பணியாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயானத்துக்குச் சென்ற பாலகிருஷ்ணன் கூறியது: சடலத்துடன் வெட்டவெளியில் 2 மணி நேரத்திற்கு அதிகமாகவே காத்திருக்க நேரிட்டது. சடலத்தை எரியூட்ட பயன்படும் விறகு விலைக்கு வாங்கிக் கொடுத்தும் சடலத்தை எரியூட்டுவதில் தாமதமேற்படுவது ஏன் எனத்தெரியவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் கூறியும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்குகிறோம் என அலட்சியமாகவே பதில் கூறுகின்றனா். நகரசபைத் தலைவா்தான் இப்பிரச்னையில் தலையிட்டு தீா்வு காணவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.