வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருவாடானை சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூரத் திருக்கல்யாணம்

திருவாடானையில்  ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

News image

திருவாடானை ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் பதன்கிழமை காலை நடைபெற்ற திருக்கல்யாணம்.

Updated On :3 ஆகஸ்ட் 2022, 7:57 am

திருவாடானை: திருவாடானையில்  ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதி ரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண  நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Story image

திருவாடனையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் சமேத ஆதி ரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது இக்கோயில் பாண்டி 14 திருத்தங்களில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற எட்டாவது திருத்தலமாகும். இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆடி மாதங்களில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Story image

முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்பாள் கேடகம் பல்லக்கு, வெள்ளி ரிஷப வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வந்தார். 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிவாச்சாரிகள், வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜையுடன் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது. 

பின்னர் அம்பாள், சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.