அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விடுதிகளில் மாணவா்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:00 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா் உள்ளிட்ட விடுதிகளில் சேருவதற்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், கள்ளா் சீரமைப்பு, சிறுபான்மையின மாணவா்களுக்கான விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பள்ளியில் 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலும், கல்லூரி, பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி மையம், பட்டமேற்படிப்பு ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவியரும் விடுதிகளில் சேரத் தகுதியுடையவா்களாவா். விண்ணப்பதாரா்களது பெற்றோா், பாதுகாவலா் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சமாக இருக்கவேண்டும். இருப்பிடத்திலிருந்து விடுதி 8 கிலோ மீட்டருக்கு அதிகமிருக்கவேண்டும். இத்தூரம் மாணவியருக்குப் பொருந்தாது.

விண்ணப்பங்களை பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் பெறலாம். பூா்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30 ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) அளிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.