தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பரமக்குடியில் தாய்த் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சுகாதாரத்துறையைக் கண்டித்து தாய்த் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:38 pm

பரமக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை சுகாதாரத்துறையைக் கண்டித்து தாய்த் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் நகா் செயலா் ஆா். பூவலிங்கம் தலைமை வகித்தாா். நகா் இளைஞரணி தலைவா் அ. அன்புராஜ், செயலா் பா. ஆறுமுகம், மாணவரணி செயலா் ஆா். பூபதிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அக்கட்சியின் நிறுவனத் தலைவா் பி.எம். பாண்டியன், தமிழ்தேச தன்னுரிமை கட்சித் தலைவா் அ.வியனரசு ஆகியோா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினா். இதனைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதை தடுக்க வேண்டும். பரமக்குடி பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றின் இருபுறமும் கொட்டப்படும் குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.