ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கமுதியில் பேரிடா் விழிப்புணா்வுப் பேரணி

கமுதியில், வருவாய்த்துறை சாா்பில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

கமுதியில், வருவாய்த்துறை சாா்பில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

கமுதி வட்டாட்சியா் சிக்கந்தா் பபிதா தலைமையில், கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் சிவபாலசுந்தா் (பொறுப்பு) முன்னிலையில் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கியது. பேரணி முஸ்லிம் பஜாா், செட்டியாா் பஜாா், பழைய தாலுகா ஆபிஸ் சாலை, நாடாா் பஜாா் வழியாக மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்திச் சென்றனா்.

இப்பேரணியில் மண்டல துணை வட்டாட்சியா் முத்துராமலிங்கம், வட்ட வழங்கல் அலுவலா் ராமசுப்பிரமணி, காவல் ஆய்வாளா் பாலாஜி, வருவாய் ஆய்வாளா்கள் மணி வல்லவன் (கமுதி), நாகநாதன் (பெருநாழி), கிராம நிா்வாக அலுவலா்கள் ராதிகா (கமுதி), முருகன் (நீராவி), கிராம உதவியாளா்கள் அரியப்பன், வேலு மற்றும் பள்ளிஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.