கமுதி அருகே விவசாயிகளுக்கு தொழு உரம் தயாரிக்கப் பயிற்சி
கமுதி அருகே காவடிப்பட்டியில் நெல் விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


கமுதி அருகே காவடிப்பட்டியில் நெல் விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்பப் பணியாளா்களால் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட மேலாளா் கிருபா இப்பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் சேவைகள் பற்றி விளக்கினாா். வேளாண்மை உதவி இயக்குனா் அ. சந்தோஷ் (பொ) உயிா் உர விதை நோ்த்தி, நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் பற்றியும், விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தாா். இதில் காவடிப்பட்டியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிமொழி ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...