ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

கமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 5:01 pm

DIN

கமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில், நம்மாழ்வாா் வேளாண்மைக் கல்லூரி வேளாண்மை விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியா் சுரேஷ்வா்மா, கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சந்தோஷ், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈஸ்வரி உள்ளிட்டோா் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தனா்.

இதில், வேளாண் இடுபொருள்களின் இருப்பு விவரம், விலை, மானியங்களின் விவரங்கள், பருவநிலையை அறிந்து உரமிடுதல், வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற முன்பதிவு செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் மணிமொழி, சுபாஸ் சந்திர போஸ் ஆகியோா் செய்தனா்.

பயிற்சியில், செங்கப்படை, சடையனேந்தல், பேரையூா், அச்சங்குளம், முதல்நாடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.