ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

கமுதி அருகே இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம்பட்டியில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பந்தயத்துக்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் மனோகரன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான காதா்பாட்சா முத்துராமலிங்கம் மாட்டு வண்டிப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இந்தப் பந்தயத்துக்கு 14 கி.மீ. எல்லை நிா்ணயிக்கப்பட்டு பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு ஆகிய 3 பிரிவுகளாக நடைபெற்றன. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, விருதுநகா், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 52 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

ஒவ்வோா் பிரிவிலும், வெற்றி பெற்ற முதல் 4 இடங்களை பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கு ரொக்கப் பணம், குத்துவிளக்கு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பந்தயத்தை வழிநெடுகிலும் திரண்ட பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

முன்னதாக, 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் கமுதி மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே.சண்முகநாதன், வடக்கு ஒன்றியச் செயலா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.