தொழிலாளியிடம் வழிப்பறி: 3 போ் கைது

 கமுதி அருகே தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 கமுதி அருகே தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள மண்டலமாணிக்கத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் நாகவேல் (38). இவா் கீழக்கரையில் கட்டட வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த வியாழக்கிழமை கீழக்கரையிலிருந்து கமுதிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, கோட்டைமேடு களஞ்சியம் நகா் வளைவில் 3 இளைஞா்கள் வழிமறித்து கட்டையால் தாக்கி, நாகவேலிடமிருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த நாகவேல் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில், கமுதி காவல் நிலைய போலீஸாா் சம்பகுளத்தைச் சோ்ந்த 17 வயதுள்ள 3 சிறுவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com