கல்லூரி மாணவி தற்கொலை

 பரமக்குடி அருகே கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

 பரமக்குடி அருகே கல்லூரி மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கமுதக்குடி நடுத்தெருவைச் சோ்ந்த முத்துகணேசன் மகள் காவ்யா (21). இவா் பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தாா்.

இவா் கடந்த சில மாதங்களாக மனநலன் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பரமக்குடி நகா் போலீஸாா் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அதன் பின்னா், உறவினா்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com