பருத்திப் பயிரில் வயல் திருவிழா

கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடி கிராமத்தில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பருத்திப் பயிரில் வயல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பருத்திப் பயிரில் வயல் திருவிழா
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அ.தரைக்குடி கிராமத்தில் வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பருத்திப் பயிரில் வயல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மைத் துணை இயக்குநா் (அட்மா) பொறுப்பு செல்வம் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி,

வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தாா். என்.எம்.வி. வேளாண்மைப் பல்கலைக்கழக கழகத்தின் உதவிப் பேராசிரியா் பிரதீப்ராஜ், பருத்தியில் உயா் விளைச்சல் பெற விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா். இந்த நிகழ்ச்சியில் தரைக்குடி, புனவாசல், வல்லக்குளம் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com