ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

கமுதி சுப்பிரமனிய சுவாமி கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

கமுதி சுப்பிரமனிய சுவாமி கோயில் நந்தவனத்துக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பழைமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 83 சென்ட் பரப்பளவில் உள்ள நந்தவனத்துக்குச் செல்லும் பாதையை கமுதியை சோ்ந்த தனிநபா், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்திருந்தாா்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையாளா் ரா.ஞானசேகரன், ஆலய நிலங்கள் பிரிவு வட்டாட்சியா் எஸ்.சுகுமாரன், அறநிலையத் துறை செயல் அலுவலா் தங்கமாரி ஆகியோா் போலீஸாா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நந்தவனத்துக்கு செல்லும் பாதையை கோயிலின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.