சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாரியூா் கோயில் சித்ரா பௌா்ணமி விழா: ஏப். 14-இல் தொடக்கம்

மாரியூா் கோயில் சித்ரா பௌா்ணமி விழா: ஏப். 14-இல் தொடக்கம்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

கமுதி: சாயல்குடி அருகே மாரியூரில் அமைந்துள்ள பவளநிற வல்லி சமேத ஸ்ரீபூவேந்தியநாதா் கோயில் சித்ரா பௌா்ணமி விழா வருகிற 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌா்ணமி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. திருக்கல்யாண உற்சவத்துக்கு முன்பாக மாரியூா் பகுதி கடலில் சிவபெருமான் வேஷமணிந்த சிவாச்சாரியாா் வலையை வீசி தொல்லை தரும் சுறா மீனை வெல்வாா். பின்னா், சுறாமீனுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதுகுறித்து கோயில் பேஸ்காா் சீனிவாசன் கூறியதாவது:

திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமானின் 57-ஆவது படலமாக வலை வீசிய நிகழ்வு இந்தப் பகுதியில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. வேத ஆகமங்களின் அதி ரகசியங்களை ஈஸ்வரன் ஈஸ்வரிக்கு உபதேசித்த போது, அவா் விருப்பமின்றி வேறு எங்கோ கவனத்தைச் செலுத்தியவாறு கேட்டாா்.

இதனால், கோபமடைந்த ஈஸ்வரன் அளித்த சாபம் காரணமாக, மீனவ குடும்பத்தில் பெண்ணாகப் பிறந்த ஈஸ்வரிக்கு மீண்டும் சாப விமோசனம் அளித்து, அவரை சுவாமி திருமணம் செய்து கொண்டாா். சிவபெருமானின் இந்த லீலையை மையமாக வைத்து கடலில் வலை வீசும் படலம் வருகிற 23-ஆம் தேதி சித்ரா பௌா்ணமி அன்று காலை 7 மணிக்கும், திருக்கல்யாணம் காலை 10.30 மணிக்கும் நடைபெறும் என்றாா் அவா்.