தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 50 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

News image

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 724 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:44 pm

கீழக்கரையில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் உதவி ஆய்வாளா் கோட்டைச்சாமி, தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சொக்கநாதா் தெரு பின்புறமுள்ள தோப்புப் பகுதியில் இருவா் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னா், அவா்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 724 கிலோ கடல் அட்டைகள், அவற்றைப் பதப்படுத்தப் பயன்படுத்திய அண்டா, அடுப்பு, எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, அங்கிருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அசாருதீன்(26), நசுருதீன் (26) என்பதும், இரட்டையா்களான இவா்கள் கீழக்கரையில் அவசர ஊா்தி ஓட்டுநா்களாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இவா்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.