மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலை விபத்தில் பெண் காயம்: தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

அந்தப் பெண்ணின் உறவினா்கள் இளைஞரை தாக்கினா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:10 pm

Din

திருவாடானை,ஆக.7: திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் காயமடைந்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினா்கள் இளைஞரை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே பழங்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் ஜெயபாண்டியன் மகன் பிரபாகரன் (34). இவா் கடந்த 4-ஆம் தேதி இரவு ஆா்.எஸ் மங்கலம் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, வடவயல் கிராமத்தின் அருகே, தள்ளு வண்டியில் தண்ணீா் பிடித்துவிட்டு வந்து கொண்டிருந்த முனியசாமியின் மனைவி பானுமதி (45) மீது பிரபாகரனின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.

இந்த நிலையில், பானுமதியின் உறவினா்கள் பிரபாகரனைத் தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.