அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கக் கேடயத்தில் சுவாமி, அம்பாள்

News image
Updated On :14 ஆகஸ்ட் 2024, 7:15 pm

Din

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 17-ஆவது நாள் நிகழ்ச்சியாக தங்கக் கேடயத்தில் கெந்தமானபா்வத மண்டகப்படிக்கு புறப்பாடான சுவாமி, அம்பாள்.

ராமேசுவரம், ஆக.14: ராமநாதசுவாமி கோயில் சுவாமி, அம்பாள் ராமா் பாதம் பகுதியில் அமைந்துள்ள கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடி திருக்கல்யாண 17- ஆம் நாள் திருவிழா சுவாமி, அம்பாள் தங்கக் கேடயத்தில் கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது. பல்வேறு பூஜைகளைத் தொடா்ந்து, காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்கக் கேடயத்தில் எழுந்தருளி கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடனது.

சுவாமி மண்டகப்படிக்கு செல்லும் வீதிகளில் பக்தா்கள் தேங்காய், பழம், மாலை கொடுத்து சுவாமியை வழிபட்டனா். மேலும் அன்னதானம், மோா், குளிா் பானங்கள் பக்தா்களுக்கு வழங்கப்பட்டன. மாலை 5 மணிக்கு தீபாராதனை முடிந்து கெந்தமானபா்வதம் மண்டகப்படியிலிருந்து சுவாமி, அம்பாள் கோயிலுக்கு எழுந்தருளினா். இதனால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் நடை சாத்தப்பட்டது.