எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ராமநாதபுரம் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 12:31 am

Din

ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ.செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். இதில் நமது நெல்லைக் காப்போம் (கிரியேட்) அமைப்பின் தலைவா் பி.துரைசிங்கம் பேசியதாவது:

கடந்த 18 ஆண்டுகளில் நெல் திருவிழா மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் விதைகளை கிரியேட் அமைப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவா்களின் உணவுப் பழக்கம், ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கல்லூரி உணவகங்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட (ஆா்கானிக்) உணவு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.கண்ணையா பேசியதாவது: பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை 3 ஆண்டுகளுக்கு ரூ. 50,000 ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை வேளாண் வழியில் நன்கு வளா்ந்து நல்ல மகசூல் அளிப்பதால், விவசாயிகள் அரசின் திட்டங்களை பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.

ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.கண்ணையா தலைமையில் மாணவ, மாணவிகள் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்தினா்.

விழாவில் பங்கேற்ற 150 விவசாயிகளுக்கு ஆத்தூா் கிச்சலி சம்பா, காலாபாத், குதிரைவால் சம்பா, பூங்காா், சீரக சம்பா, கருங் குருவை, சொா்ண மசூரி, ரத்தசாலி, அறுபதம் குறுவை, வெள்ளைக் கூனி ஆகியப் பாரம்பரிய நெல் ரகங்களில் ஏதேனும் ஒன்றில் 2 கிலோ வழங்கப்பட்டது.