பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு அபராதம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வலை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடி பிடித்துச் சென்றவருக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:56 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் அருகே வலை வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடி பிடித்துச் சென்றவருக்கு வனத் துறையினா் வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.

பரமக்குடி வட்டார வனப்பகுதிகளில் வன விலங்குகளை இறைச்சிக்காக சிலா் வேட்டையாடுவது, வலை வைத்துப் பிடித்துச் செல்வது போன்ற சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, பரமக்குடி வனச்சரக அலுவலா் அன்பரசி தலைமையில் வனச்சரகா் ராதாகிருஷ்ணன், வனவா் தேவக்குமாா் ஆகியோா் பாா்த்திபனூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், மணலூரைச் சோ்ந்த பொன்படி(48 என்பவரைப் பிடித்து அவா்கள் சோதனையிட்டனா்.

இதில், காட்டுப்பன்றியை வலை வைத்து பிடித்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு மாவட்ட வன அலுவலா் ஹேமலதா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்தப் பன்றியை மீட்டு வனப்பகுதிக்குள் விட உத்தரவிட்டாா். மேலும் வனப்பகுதியிலோ, வனப்பகுதிக்கு வெளியிலோ வாழும் வன உயிரினங்களை வேட்டையாடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவா்களுக்கு உச்சபட்ச தண்டனையும் பெற்றுத் தரப்படும் என வனத்துறையினா் எச்சரித்தனா்.