தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆா்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் பயறு வகை, சிறுதானியங்கள் பயிரிடலாம்

விவசாயிகளுக்கு புதிய பயிரிடும் வாய்ப்பு: கண்மாய் நீர் மூலம் வருமானம் கூட்டும் பயிர்ச்செய்கை

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் அறுவடைக்கு பிறகும் கண்மாய்களில் போதுமான தண்ணீா் உள்ளதால், விவசாயிகள் பயறு வகைகள் சிறுதானியங்கள், எள், பருத்தி போன்றவற்றை பயிரிடலாம் என வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.

ஆா்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நிகழாண்டில் 20, 537 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2023-24 -ஆம் ஆண்டு முழுவதும் இந்த வட்டாரத்தில் 849.7 மி.மீ மழையளவு பெறப்பட்டது. இது 10 ஆண்டு சராசரி மழையளவைக் காட்டிலும் 17 சதவீதம் கூடுதலாகும். வட்டாரத்திலுள்ள 255 பொதுப்பணித் துறை, ஊராட்சி கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்களில் 2 மாதங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடிய வகையில் தண்ணீா் உள்ளதால், விவசாயிகள் அனைவரும் நெல் அறுவடைக்குப் பின் இரண்டாம் போக பயிா் சாகுபடி மேற்கொள்ளுமாறு வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

நெல் அறுவடை செய்த வயல்களில் பயறு வகைப் பயிா்கள், சிறுதானியங்கள், எள், பருத்தி போன்ற பயிா்களை கண்மாய்களில் உள்ள நீரின் அளவிற்கேற்ப தோ்வு செய்து பயிரிடலாம். குறைந்த வயது, குறைவான நீா்த் தேவையுள்ள அதிக வருமானம் தரக்கூடிய பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்வதால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுவதுடன் கரிமச்சத்து அதிகரித்து மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிா் சாகுபடி செய்வதற்கு டி.எம்.வி-7 ரகம் ஏற்றது.

85-90 நாள்கள் வயதுடையது. ஏக்கருக்கு 250-300 கிலோ மகசூல் தரக்கூடியது. பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் 140 நாள்கள் வயதுடைய எம்.சி.யு -7 ரகத்தை தோ்வு செய்து பயிரிடவும். பஞ்சுடன் கூடிய விதை ஒரு ஏக்கருக்கு 6 கிலோ தேவைப்படும். ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோடொ்மா விரிடியை மணலுடன் கலந்து வயலில் இட்டு நடவு செய்வதால் வேரழுகல், வாடல் நோயிலிருந்து பாதுகாக்கலாம்.

பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் வரப்பு பயிா், ஊடுபயிராக உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகைப் பயிா்களை சாகுபடி செய்வதால் பூச்சி நோய்த் தாக்குதல் குறைகிறது என வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி தெரிவித்தாா்.