குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வடமாநில மாணவா்களை அரிவாளுடன் விரட்டிய இளைஞா்

வடமாநில மாணவா்களை அரிவாளுடன் விரட்டிய இளைஞா்

News image
Updated On :26 பிப்ரவரி 2024, 4:28 pm

ராமேசுவரம்: ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்த வடமாநில மாணவா்களை மது போதையில் அரிவாளுடன் விரட்டிய இளைஞா் மீது திங்கள்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் வா்த்தகன் தெருவில் தா்மா் என்பவரது தனியாா் விடுதி உள்ளது. அதே பகுதியில் பாலமுருகன் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் 20 போ் மூன்று அறைகள் எடுத்து ஞாயிற்றுக்கிழமை தங்கியிருந்தனா். இரவு 9.30 மணிக்கு விடுதி வாசலில் மாணவா்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனா்.

இந்த நிலையில், தா்மா் விடுதி ஊழியா் ராமமூா்த்தி (35) மது போதையில் மாணவா்களிடம் வாக்குவாதம் செய்தாா். பின்னா், அரிவாளால் மாணவா்களை தாக்கும் விதமாக 100 மீட்டா் வரை விரட்டிச் சென்றாா். இதையடுத்து, விடுதிக்குள் சென்ற அவா் மாணவா்கள் தங்கிருந்த அறைக் கண்ணாடியை உடைத்தாா். இதுதொடா்பாக தனியாா் விடுதி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், ராமமூா்த்தியை கைது செய்யக் கோரி கோயில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.