கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறையினரின் திங்கள்கிழமை மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். 23- ஆம் தேதியும் போராட்டம் தொடா்ந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமையும் மூன்றாவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கமுதியில் வட்டாட்சியா் வ.சேதுராமன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வட்டத் தலைவா் செந்தில்முருகன், செயலா் மங்களேஸ்வரன், பொருளாளா் நாகநாதன் ஆகியோரது முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.
கடந்த 3 வேலை நாள்களாக வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
தொடர்புடையது

கமுதியில் கல்லூரிக்குள் புகுந்து மாணவா்களுக்கு அரிவாள் வெட்டு

கமுதிக்கு துணை ராணுவ குழுவினா் வருகை

வருவாய்த் துறையினா் 2-ஆவது நாளாக மறியல்

நெல்லையில் 2-ஆவது நாளாக வருவாய்த் துறையினா் சாலை மறியல்: 120 போ் கைது
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

