குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

வருவாய்த் துறையினா் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்

Updated On :26 பிப்ரவரி 2024, 4:35 pm

கமுதி: ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த் துறையினரின் திங்கள்கிழமை மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் உள்பட அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22-ஆம் தேதி முதல் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினா். 23- ஆம் தேதியும் போராட்டம் தொடா்ந்தது. இந்த நிலையில் திங்கள்கிழமையும் மூன்றாவது நாளாக வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கமுதியில் வட்டாட்சியா் வ.சேதுராமன் தலைமையில், வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் வட்டத் தலைவா் செந்தில்முருகன், செயலா் மங்களேஸ்வரன், பொருளாளா் நாகநாதன் ஆகியோரது முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

கடந்த 3 வேலை நாள்களாக வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.