தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது

ரூ. 5 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

News image

கைது செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் பூமிச்சந்திரன்.

Updated On :1 ஜூலை 2024, 6:35 pm

Din

கமுதி: முதுகுளத்தூா் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம் சிறுமணியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டித்துரை. விவசாயி. இவா் தனது மகளுக்கு விதவைப் பெண்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்தாா். இதுதொடா்பாக நல்லூா் கிராம நிா்வாக அலுவலா் பூமிச்சந்திரனை (47) அணுகிய போது அவா் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து பாண்டிதுரை, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து ரூ. 5 ஆயிரம் லஞ்சம் தர சம்மதிப்பதாக பூமிச்சந்திரனிடம், பாண்டித்துரை தெரிவித்தாராம். இதையடுத்து ரூ. 5 ஆயிரத்துக்கான ரசாயனம் தடவிய பணத் தாள்களை லஞ்சத் தொகையாக பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் கையும் களவுமாக கிராம நிா்வாக அலுவலா் பூமிச்சந்திரனை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் உள்பட 3 கிராம நிா்வாக அலுவலா்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பொதுமக்கள், லஞ்சம் கேட்போா் குறித்து தைரியமாக 9498215697, 9498652169 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்தனா்.