கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:26 pm

Din

ராமேசுவரம், ஜூலை 19: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மீனவா்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக 45 முதல் 60 கி.மீ. வரை சூறைக் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது. இதனால், கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இந்த நிலையில், வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், மீனவா்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவா்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.