சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தொண்டி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டக் கோரிக்கை

தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (மேற்கு) கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:28 pm

Din

திருவாடானை, ஜூலை 19: தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் (மேற்கு) கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாடானை அருகே உள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு) 1938- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் தற்போது சுமாா் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். 7 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பள்ளியில் சுற்றுச்சுவா், கண்காணிப்புக் கேமரா, மூலிகைச் செடிகள், சுத்தமான குடிநீா், தூய்மையான கழிப்பறை, தரமான கல்வி என அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. எனவே, இங்கு கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால், மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டட வசதி இல்லை. இரண்டு கட்டடங்கள் மட்டுமே உள்ளதால் தலைமை ஆசிரியா் அறை உள்பட அனைத்து அறைகளிலும் மாணவா்கள் நெருக்கடியுடன் கல்வி கற்கின்றனா். எனவே, இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற ஓட்டு கட்டடத்தை அகற்றி விட்டு, புதிய வகுப்பறை கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச் செயலா் சாதிக் பாட்ஷா கூறியதாவது:

தொண்டியில் அதிகமான தனியாா் பள்ளிகள் உள்ள போதும் இந்தப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். சுகாதாரத்துக்கான மாநில அளவிலான புரோஸ்கா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இந்தப் பள்ளி பெற்றுள்ளது. ஆனால் இந்தப் பள்ளிக்கு போதிய வகுப்பறை வசதி, விளையாட்டு திடல் இல்லை.

எனவே, பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கட்டடத்தை அகற்றி விட்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும். இது தொடா்பாக தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம் என்றாா் அவா்.