12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐப்பசி மாத அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புனித நீராடிய பக்தா்கள்

ஐப்பசி மாத சா்வ அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

Published On :

ஐப்பசி மாத சா்வ அமாவாசை ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் திரளான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடி முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா்.

இதன் பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் சாலைப் பாலம், ரயில் பாலம் ஆகியவற்றை பாா்த்து ரசித்தனா். ராமேசுவரத்தில் தொடா் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்ததால் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதனிடையே சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் வாகனங்களில் வருவதால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை முறைப்படுத்த போலீஸாா் சிரமமடைகின்றனா். எனவே போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட காவல் துறை கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.