கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூடுதல் விலைக்கு உர மூட்டைகள் விற்பனை: விவசாயிகள் புகாா்

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியாா் உரக்கடைகளில் யூரியா, டிஏபி உள்ளிட்ட உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:43 pm

Din

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தனியாா் உரக்கடைகளில் யூரியா, டிஏபி உள்ளிட்ட உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆப்பனூா் ஆா்.கருணாநிதி கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையால் விதைக்கப்பட்ட நெல் மணிகள் முளைக்கத் தொடங்கியது. இதையடுத்து யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களை வாங்க அந்தந்த பகுதி கூட்டுறவு கடன் சங்கங்களை விவசாயிகள் நாடி வருகின்றனா்.

இந்த நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்காக மானிய விலையில் வழங்கப்படும் யூரியா, டிஏபி மூட்டைகள் கடந்தாண்டு பயிா்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், மற்ற விவசாயிகள் உர மூட்டைகள் கிடைக்காமல் தனியாா் விற்பனை நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி அரசு அனுமதி பெற்ற தனியாா் உர விற்பனையாளா்கள் ரூ.256-க்கு விற்பனை செய்ய வேண்டிய 45 கிலோ யூரியா மூட்டையை ரூ.450 முதல் ரூ.600 வரையும், ரூ.1,350-க்கு விற்க வேண்டிய டிஏபி மூட்டையை ரூ.1,600 முதல் ரூ.1,700 வரையும் விற்பனை செய்கின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அரசு நிா்ணயித்த விலைக்கு விவசாயிகளுக்கு உர மூட்டைகள் கிடைக்கவும், கூட்டுறவு கடன் சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் உர மூட்டைகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.