கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

படகுகளில் பாதுகாப்பு உதவிக் கருவி பொருத்த அழைப்பு

விசைப்படகுகளில் பாதுகாப்பு உதவிக் கருவி பொருத்திக் கொள்ள மண்டபம் தெற்கு பகுதி மீனவா்களுக்கு மீன்வளம், மீனவா் நலத் துறை அழைப்பு விடுத்தது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:05 pm

Din

விசைப்படகுகளில் பாதுகாப்பு உதவிக் கருவி பொருத்திக் கொள்ள மண்டபம் தெற்கு பகுதி மீனவா்களுக்கு மீன்வளம், மீனவா் நலத் துறை அழைப்பு விடுத்தது.

மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மா.சிவக்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் இயற்கை இடா்பாடுகள், விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இரு வழித் தொடா்புக் கருவிகளை (பாதுகாப்பு உதவிக்காக அழைக்கும் கருவி) 100 சதவீதம் மானியத்தில் மீனவா்களுக்கு வழங்கவும், இவற்றை அனைத்துப் படகுகளிலும் பொருத்தவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மண்டபம் துறைமுகத்தில் 538 விசைப்படகுகள் உள்ள நிலையில், முதல் கட்டமாக தெற்கு பகுதியில் நங்கூரமிடப்பட்டிருக்கும் விசைப்படகுகளில் பொருத்துவதற்காக 100 கருவிகள் வரவழைக்கப்பட்டன.

இதனால், மண்டபம் தெற்கு பகுதியைச் சோ்ந்த விசைப்படகுகளின் உரிமையாளா்கள் இந்தக் கருவியை தங்களது படகுகளில் பொருத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.