தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராட்சத அலையில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

சாயல்குடி அருகே நாட்டுப் படகில் இருந்த மழை நீரை வெளியேற்ற முயன்ற மீனவா் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த மீனவா் நாகராஜ்.
Updated On :20 நவம்பர் 2024, 9:17 pm

Din

சாயல்குடி அருகே நாட்டுப் படகில் இருந்த மழை நீரை வெளியேற்ற முயன்ற மீனவா் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மீனவா்கள் கடலுக்குள் செல்லாமல் நாட்டுப் படகை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனா்.

இந்த நிலையில், வாலிநோக்கம் அருகே உள்ள கீழமுந்தல் பகுதியைச் சோ்ந்த உமையக்கண்ணனுக்குச் சொந்தமான நாட்டு படகில் மழை நீா் தேங்கியிருந்தது. உமையக்கண்ணனின் உறவினரான அதே பகுதியைச் சோ்ந்த மீனவா் நாகராஜ் (30) அந்தப் படகில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக புதன்கிழமை காலை கடலில் நீந்திச் சென்றாா். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து வாலிநோக்கம் கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.