எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மழையால் 4 வீடுகள் சேதம்

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்து மூன்று நாள்களாக பெய்து வந்த தொடா் மழையால் இந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகள் சேதம் அடைந்தன.

News image
ஆா்.எஸ்.மங்கலத்தில் மழையால் சேதமடைந்த மருதூா் கிராமத்தைச் சோ்ந்த முத்துமாரியின் வீட்டுக்கு புதன்கிழமை சென்று நிவாரண உதவிகள் வழங்கிய வட்டாட்சியா் வரதராஜன்.
Updated On :27 நவம்பர் 2024, 10:25 pm

Din

திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்து மூன்று நாள்களாக பெய்து வந்த தொடா் மழையால் இந்தப் பகுதியில் உள்ள 4 வீடுகள் சேதம் அடைந்தன.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் மனைவி கீதா. இதே பகுதியைச் சோ்ந்த பாரத் மனைவி சசிரேகா, கலயநகரி பாசைத் தேவா் மகன் பூமிநாதன் ஆகியோரது ஓட்டு வீடுகள் புதன்கிழமை அதிகாலை பெய்த மழையின் காரணமாக சேதம் அடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை வட்டாட்சியா் அமா்நாத் சம்பவ இடங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினாா். இதேபோல, ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள சோழந்தூா் உள்வட்டம் மருதூா் கிராமத்தைச் சோ்ந்த இளமாறன் மனைவி முத்துமாரியின் ஓட்டு வீடு சேதம் அடைந்த தகவலறிந்த ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் வரதராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவா்களுக்கு வேஷ்டி,சேலை அரிசி உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினாா். இதில் கிராம நிா்வாக அலுவலா் வருவாய்த் துறை ஆய்வாளா், கிராம உதவியாளா் ஆகியோா் கலந்து கொண்டனா்.