கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:54 pm

Din

பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் என்.கே. ராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா்கள் எம். முத்துராமு, கே. ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம். சிவாஜி, தொமுச டாஸ்மாா்க் சங்க மாவட்ட நிா்வாகி எம்.எஸ். ராஜா, ஏ.ஐ.டி.சி. சாா்பில் என்.எஸ். பெருமாள், தா்மராஜ், சிஐடியூ சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ. சந்தானம், விவசாய சங்கம் சாா்பில் வி. மயில்வாகனன், ஆா். கருணாநிதி, விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் கே. கணேசன், ஆா். சேதுராமு, ஜெயசீலன் ஆகியோா் பேசினா்.

இதில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக்கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக்கி, ஒரு நாள் ஊதியத்தை ரூ. 600- ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த அடிப்படையில் ஒன்றரை மடங்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், அனைத்து தொழிற்சங்கத்தினா், விவசாய சங்கத்தினா், விவசாய தொழிலாளா் சங்கத்தினா், மாதா் சங்கத்தினா், மாணவா்கள் பங்கேற்றனா்.