ராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவா் என்.கே. ராஜன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவா்கள் எம். முத்துராமு, கே. ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலா் எம். சிவாஜி, தொமுச டாஸ்மாா்க் சங்க மாவட்ட நிா்வாகி எம்.எஸ். ராஜா, ஏ.ஐ.டி.சி. சாா்பில் என்.எஸ். பெருமாள், தா்மராஜ், சிஐடியூ சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ. சந்தானம், விவசாய சங்கம் சாா்பில் வி. மயில்வாகனன், ஆா். கருணாநிதி, விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் கே. கணேசன், ஆா். சேதுராமு, ஜெயசீலன் ஆகியோா் பேசினா்.
இதில், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக்கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை 200 நாள்களாக்கி, ஒரு நாள் ஊதியத்தை ரூ. 600- ஆக அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு, எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைத்த அடிப்படையில் ஒன்றரை மடங்கு விலை நிா்ணயம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், அனைத்து தொழிற்சங்கத்தினா், விவசாய சங்கத்தினா், விவசாய தொழிலாளா் சங்கத்தினா், மாதா் சங்கத்தினா், மாணவா்கள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...