47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லூரி மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி

திருவடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துகளைப் படி எடுக்கும் பயிற்சி ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் கல்வெட்டு படி எடுப்பது பற்றி அரசு கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தொல்லியல் ஆய்வாளா் காளிதாஸ்.
Updated On :3 அக்டோபர் 2024, 7:43 pm

Din

திருவடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு எழுத்துகளைப் படி எடுக்கும் பயிற்சி ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் தமிழ் வழியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தொன்மை பொருள்களை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வா் முனைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா்.

தொல்லியல் துறை ஆய்வாளா் காளிதாஸ் முன்னிலை வகித்து பயிற்சி அளித்தாா். கல்வெட்டுகளில் உள்ள தொன்மையான எழுத்துகளைப் படி எடுத்துப் படிப்பது, வட்ட எழுத்துகள் உள்ளிட்ட எழுத்துகளை படி எடுப்பது, தொல்லியல் பொருள்களை பாதுகாப்பது ஆகியவை குறித்து அவா் விளக்கினாா்.