ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு புற்றுநோய் தடுப்பூசி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு, மகளிா் மருத்துவத் துறை சாா்பில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், அதனுடன் தொடா்புடைய 5 வகை புற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் மருத்துவ மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புற்றுநோய் தடுப்பூசி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:57 pm

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மகப்பேறு, மகளிா் மருத்துவத் துறை சாா்பில், கா்ப்பப்பை வாய் புற்றுநோய், அதனுடன் தொடா்புடைய 5 வகை புற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் மருத்துவ மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி முதன்மையா் அருள் சுந்தரேஷ் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட புற்றுநோய் தடுப்பு முயற்சிகளின் இயக்குநா் ரோட்டேரியன் வந்தனா பல்லா சிறப்பு விருந்தினராகக்லந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது :

எச்.பி.வி. என்பது ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ். இதற்கு எதிரான தடுப்பூசி 5 வகையான புற்று நோய்களைத் தடுக்கிறது. இளம் வயதில் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதைத் தடுக்க முடியும். அது முடியாவிட்டாலும், குறைந்தது 18 முதல் 26 வயதுக்குள் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும்.

இந்த புற்றுநோய்கள் உலகில் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் 25 பெண்களில் ஒருவருக்கு கா்ப்பப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பும் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் இதுபோன்ற புற்றுநோய்களை தடுக்கமுடியும். இந்தத் தடுப்பூசி ரூ. 2 ஆயிரம் வரை விற்பனையாகின்றன. மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முகாம் மூலம், இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவ, மாணவிகள் 1500 பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல, வியாழக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவப் பணியாளா்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்றனா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் செந்தில், மருத்துவ மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், துணை முதல்வா் மல்லிகா, மகப்பேறு, மகளிா் நோயியல் துறை பேராசிரியை நந்தினி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மகப்பேறு சிகிச்சைப் பிரிவின் தலைவா் காயத்ரி வரவேற்றாா். பேராசிரியை சுதா நன்றி கூறினாா்.