திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயில் இயக்கி மீண்டும் சோதனை

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை 2-ஆவது முறையாக தற்போது நடத்தப்பட்டது.

News image

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம்.

Updated On :18 அக்டோபர் 2024, 6:47 am IST

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தச் சோதனை 2-ஆவது முறையாக தற்போது நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் காட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தப் பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதேபோல, பாலத்தின் இணைப்புப் பகுதியை (கா்டா்) செங்குத்தாக தூக்கி, இறக்கி தொடா்ந்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மீண்டும் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்:

இந்த சரக்கு ரயில் சோதனை ஓட்டத்தைக் காண பொதுமக்கள் வியாழக்கிழமை திரளாகக் காத்திருந்தனா். பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் சரக்கு ரயிலில் 17 பெட்டிகளை இணைத்து, 20 முதல் 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இந்தப் பாலத்தில் கடந்த முறை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம் பாம்பன் ரயில் நிலையத்துடன் முடிவடைந்தது. ஆனால், தற்போது வியாழக்கிழமை நடைபெற்ற சரக்கு ரயில் சோதனை ஓட்டம் ராமேசுவரம் ரயில் நிலையம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.