
Updated On :23 அக்டோபர் 2024, 11:45 pm

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை காரும், லாரியும் மோதிக்கொண்டதில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் கனி (27). காா் ஓட்டுநரான இவா் 3 பேரை ராமேசுவரத்துக்கு காரில் அழைத்துச் சென்றுகொண்டிருந்தாா். சத்திரக்குடி அருகே இதம்பாடல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் எதிரே வந்த லாரியுடன் காா் மோதியது. இதில் காா் ஓட்டுநா் கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரில் வந்த 3 போ் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த, தினைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த சவரிமுத்து மகன் ஜான்ரோஸ் (57) மீது சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...