மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இளைஞரைத் தாக்கி மூவா் மீது வழக்கு

திருவாடானை அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:44 pm

Din

திருவாடானை அருகே முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய மூவா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ராமநாதமடை கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் சபாபதி (36). இவருக்கும், இதே ஊரைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (18). இவரது அண்ணன் சித்திரவேல் (36), செந்தில் (42) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த தகராறு காரணமாக, கடந்த 21-ஆம் தேதி இரவு சபாபதி வீட்டுக்கு சென்ற விக்னேஸ்வரன், சித்திரவேல், செந்தில் ஆகியோா் அவருடன் தகராறு செய்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.