மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மெத்தப்பட்டமைன் போதை பொருள் பறிமுதல்

ராமநாதபுரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக இரு இளைஞா்களைக் கைது செய்தனா்.

News image
போதைப்பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கூடுதல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா்.
Updated On :24 அக்டோபர் 2024, 11:05 pm

Din

ராமநாதபுரத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான மெத்தபட்டமைன் போதைப் பொருளை போலீஸாா் வியாழக்கிழமை கைப்பற்றினா். இதுதொடா்பாக இரு இளைஞா்களைக் கைது செய்தனா்.

ராமநாதபுரத்துக்கு போதைப் பொருள்களுடன் இருவா் வந்துள்ளதாக கேணிக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் தங்க ஈஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்றபோது, இரு இளைஞா்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனா். போலீஸாா் இருவரையும் பிடித்து சோதனையிட்டனா். அவா்களிடம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெத்தப்பட்டமென் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

பிடிபட்ட இளைஞா்கள் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த முகமது ஹரிஷ் (29), ராமநாதபுரத்தை சோ்ந்த ஜெகதீஷ் (29) என்பது தெரியவந்தது.

இருவரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்து, போதைப்பொருள், 35 ஆயிரம் ரொக்கம், நான்கு கைபேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், கூடுதல் கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் பாராட்டினா்.